தீவிரமடைகிறது மாநிலத் தகுதி கோரிக்கை!
புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி கேட்டு அனைத்துக் கட்சி, சமூக அமைப்புகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு அவர்கள் தலைமையில் முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களைச் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் 'மாநில அந்தஸ்து கோரிக்கையை பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் அவர்கள் செய்யவில்லை. மாநில மக்களின் நலத்திட்டங்கள் அதிகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியவில்லை. இதனால், அன்றாடம் மன உளைச்சலாக இருக்கிறது. மாநில அந்தஸ்து பெற பல வழிகளிலும் முயற்சி செய்வோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம்' என உறுதி அளித்தார்.
இழைவியக்கம்
ஞாயிறு, 18 டிசம்பர், 2022
தீவிரமடைகிறது மாநிலத் தகுதி கோரிக்கை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
தீவிரமடைகிறது மாநிலத் தகுதி கோரிக்கை! புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி கேட்டு அனைத்துக் கட்சி, சமூக அமைப்புகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்...
-
பழைய செய்தி.. 24-01-2014 குறிப்புக்காக மட்டும்..) மாநில அந்தஸ்து கோரிக்கைப் பிரகடனம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்தை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக