இழைவியக்கம்

புதுச்சேரி முதல்வரிடம் மனு அளித்தல்
பத்திரிக்கையாளர் சந்திப்பு
புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை - முதல்வர்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

*பாஜக மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து மாநிலத் தகுதி கேட்டு தீவிரமாக போராட சமூக நல அமைப்புகள் முடிவு!*

*ஊடக அறிக்கை*

சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கோ.அழகர் இன்று (20.12.2022) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி பாஜகவின் உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்குப் போன்ற மிரட்டலுக்கு அஞ்சாமல் மாநிலத் தகுதி கேட்டுத் தொடர்ந்து தீவிரமாக போராட சமூக நல அமைப்புகள் முடிவு செய்துள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை என்பதால் மாநிலத் தகுதி கேட்டு சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு அவர்கள் தலைமையில் 60க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகின்றன. 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மனு  அளிக்கப்பட்டது. அப்போது அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பு இல்லை, மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. மாநிலத் தகுதி கிடைத்தால்தான் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியும்.  அன்றாடம் மன உளைச்சலோடு உள்ளோம் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு,  மாநிலத் தகுதி கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளது. 

இந்நிலையில், நியமன சட்டமன்ற உறுப்பினர் வி.பி.இராமலிங்கம் அவர்கள் சமூக நல அமைப்புகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு ஊடகங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இதற்குப் பதில் அளித்து சமூக நல அமைப்புகள் சார்பில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கப்பட்டது. அப்போது வி.பி.இராமலிங்கம் அவர்கள் எப்படி சட்ட விரோதமாக பல செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை ஆதாரத்தோடு எடுத்துக் கூறப்பட்டது.

அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்று கூறியது என்பது அவருடைய சட்ட விரோதச் செயல்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னால் அசிங்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர மாட்டார் என்ற அர்த்தத்தில்தான் கூறப்பட்டது. 

இந்நிலையில், நேற்றைய தினம் பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் இரண்டு அமைச்சர்கள், 7  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி பேட்டி அளித்துள்ளனர். பின்னர் சட்டப்பேரவைத் தலைவரிடம் சமூக நல அமைப்புகளின் தலைவர்கள் மீது உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளனர். 

சமூக நல அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புள்ளவை, தடை செய்யப்பட்ட அமைப்புகள் என்று அப்பட்டமாக பொய் கூறியுள்ளனர். சமூக நல அமைப்புகள் எந்த ஆட்சியாக இருந்தாலும், ஆட்சியின் அநீதிகளுக்கும், அவலங்களுக்கும் எதிராக மாநில மக்களின் உரிமைகளைக் காக்க சட்டத்தை மதித்துச் செயல்படுபவை என்பதை மக்கள் அறிவார்கள். 

மாநிலத் தகுதி கேட்டுப் போராடுவது பற்றி எதையும் கூறாமல், சமூக நல அமைப்புகளை மிரட்டும் நோக்கில் உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்கு என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் சமூக நல அமைப்புகள் அஞ்சப் போவதில்லை. மாநில மக்களின் நலன் கருதி மாநிலத் தகுதி கேட்டு உயிரைக் கொடுத்தாவது போராடும் நெஞ்சுரம் கொண்டவர்கள் சமூக நல அமைப்பினர். 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் லெட்டர் பேடு அமைப்புகள் என்று கூறிவிட்டு, பாஜக மாநிலத் தலைவர் தலைமையில் உள்துறை அமைச்சர், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பேட்டி கொடுத்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும். சமூக நல அமைப்புகள் மீது புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதும், தொடர்ந்து தன்னலமின்றி மக்கள் உரிமைகளுக்குப் போராடுவதன் காரணமாக ஏற்பட்ட அச்சம்தானே? பாஜக மாநிலத் தகுதி குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் சமூக நல அமைப்புகள் மீது சேற்றை வாரி வீசி திசைத் திருப்புவதை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

மாநிலத் தகுதி என்பது புதுச்சேரி மக்களின் உரிமைக் கோரிக்கை. அரசியல் கட்சிகள் அனைத்தும் இக்கோரிக்கையை ஆதரிக்கின்றன. 11 முறை சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த கால மத்திய அரசுகளும், தற்போதைய மத்திய பாஜக அரசும் புதுச்சேரியை மாற்றாந்தாய் மனப்பாங்கோடுதான் அணுகியுள்ளன, அணுகி வருகின்றன.

எனவே, மாநிலத் தகுதி கேட்டு தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், மக்களைத் திரட்டிப் போராடவும், இன்னும் தீவிரமாக செயல்படவும் சமூக நல அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

பாஜகவினரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்கு என எவ்வித அடக்குமுறையையும் கண்டு அஞ்சாமல்  மக்கள் ஆதரவோடு அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். 

*கோ.அழகர்,*
*ஒருங்கிணைப்பாளர்,*
*சமூக நல அமைப்புகள்,*
*புதுச்சேரி.*

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

புதுச்சேரிக்கு உண்மையான விடுதலைக் கிடைக்கவில்லை - புதுவை முதல்வர்




 

சமூக நல அமைப்புகளும் ஒன்றிணைந்து முதல்வருக்கு மனு அளித்தனர்.

புதுச்சேரிக்கு  தனிமாநில தகுதி பெற வலியுறுத்தி சட்டமன்ற  உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்கள் தலைமையில் 16-12-2022 அன்று கீழ்க் கண்ட மனு அளிக்கப்பட்டது

 பெறுநர் :                                                                                                              
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,                                         
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.

ஐயா வணக்கம்.

பொருள்: புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சி மற்றும் சமூகஅமைப்புளின் கூட்டத்தைக் கூட்டுதல்  சட்டபேரவையில் சிறப்பு சட்டமன்றத்தைகூட்டி     தீர்மானம் நிறைவேற்ற கோருதல் - தொடர்பாக.*

                        
புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்திட  வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்      G.. நேரு (எ) குப்புசாமி அவர்கள் தலைமையில் ஒன்றிணந்துள்ள 60க்கும் மேற்பட்ட சமூக இயக்கங்கள் சார்பாக இம்மனுவைத் தங்களின் மேலான கவனத்திற்கும்இ உரிய நடவடிக்கைக்கும் அளிக்கின்றோம். 


புதுச்சேரி கடந்த 1954இ நவம்பர் 1-இல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றது. கடந்த 1962 ஆகஸ்ட் 16-இல் இந்தியாவோடு இணைந்துஇ இந்திய அரசியல் சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. புதுச்சேரி விடுதலைப் பெற்ற போது 'State of Puducherry' என்று அழைக்கப்பட்டு மாநிலத் தகுதியோடுதான் இருந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைப் பறிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட, அதிகாரமற்ற 'யூனியன் பிரதேசமாக' உள்ளது. 


புதுச்சேரி விடுதலைப் பெற்ற பிறகுப் 'பிரெஞ்சிந்திய ஒப்பந்தம் (Treaty of Ceassion)' 1956 நவம்பர் 28-இல் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த    ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவற்றை செயல்படுத்தாமல் புதுச்சேரியின் ஒட்டு மொத்த உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 'பிரெஞ்சிந்திய ஒப்பந்தம்' காலாவதியாகிவிட்டது என்கின்றனர்.

17.12.1970-இல் புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வேண்டுமென நாடாளுமன்ற மேலவையில் இமாச்சல பிரதேச தனி மாநிலச் சட்ட முன்வரைவை ஆதரித்துப் பேசும் போது, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கவிஞர் ச. சிவப்பிரகாசம் (புதுவை சிவம்) பேசியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் இன்றைய நிலை வளர்ச்சி ஏதுமின்றி மிகவும் பின் தங்கியே (Backwardness) உள்ளது. குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எவ்வித அதிகாரம் இல்லாமல் உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநர் 'நிர்வாகி (Administrator)' என்ற நிலையில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவராகவும்இ தீர்மானிப்பராகவும் உள்ளார். 

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம், 1963-இல் துணைநிலை ஆளுநர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனை '(Aid and Advice)' அடிப்படையிலேயே அனைத்தும் முடிவெடுக்க வேண்டுமென கூறுகிறது. ஆனால், 2020 மார்ச் 11-இல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "புதுச்சேரி அமைச்சரவையின் முடிவுகளிலும், அன்றாட பணிகளிலும் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு" எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும்இ மத்திய உள்துறையின் நேரடிக் கட்டிப்பாட்டில் உள்ள அரசுத் தலைமைச் செயலர்இ செயலர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இதனால், மொத்தத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எவ்வித அதிகாரமும், மதிப்பும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. 


ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால் முழு       பட்ஜெட் தாக்கல் செய்ய கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக மார்ச் மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டிய பட்ஜெட் மிக கால தாமதம் ஏற்பட்டு முழு பட்ஜெட் ஆக போட முடியாமல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தாக்கல் செய்யப்படுகிறது. இருந்தும் புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய கோரும் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. சென்ற முறை தாக்கல் செய்யப்பட்ட மொத்த பட்ஜெட் தொகை 10,000 கோடி ரூபாய் ஆகும். இதில் புதுச்சேரியின் சொந்த வருவாய் தொகை 6557.23 கோடி ரூபாய் ஆகும். அதாவது மொத்த நிதியில் 60 விழுக்காடு புதுச்சேரியிலேயே திரட்டப்படுகிறது. மீதமுள்ள நிதி அளிப்பதில்தான் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. வரி மூலம் 2700 கோடி ரூபாய் மத்திய அரசுக்குச் செல்கிறது. ஆனால், புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய பங்குத் தொகை சுமார் 1200 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்குவதில்லை. ஏதோ கடமைக்கென்று குறைந்தத் தொகையை மட்டுமே அளிக்கிறது. 


யூனியன் பிரதேச அரசு என்பதால் மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்படாமல் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய போதிய நிதிக் கிடைக்கவில்லை. புதுச்சேரிக்குத் தனிக்கணக்குத் தொடங்கிய பின்னால், கடன் மற்றும் வட்டிக்கே பெருமளவில் நிதி செலவிட வேண்டியுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட கடன் தொகை 9650 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டும் மத்திய அரசு செய்யாவில்லை. இதனால், புதுச்சேரி அரசு 9650 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. 


புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியில் இருந்த 'பணித் தேர்வாணையம் (Recruitment Commission)' விடுதலைப் பெற்ற புதுச்சேரியில் உருவாக்கப்படவில்லை. இதனால், குரூப்- ஏ, குரூப்-பி உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் இந்திய அரசின் ஒன்றியப் பணித் தேர்வாணையத்தின் (Union Public Service Commission-UPSC) மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பு பறிபோய் வெளி மாநிலத்தவர் பணியமர்த்தப்படுகின்றனர். மேலும், புதுச்சேரியில் நிலவும் சமூக இடஒதுக்கீடும் பின்பற்றப்படாம மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வஞ்சிக்கப்படுகின்றனர். 


அதேபோல்இ மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளை வெளி மாநிலத்தவர் பயன்பெறும் வகையிலேயே உருவாக்குகின்றனர். இதனால், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர், அஞ்சல் துறை, பி.எஸ்.என்.எல்., ரயில்வே துறை, புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட துறைகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதனால், புதுச்சேரியில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி மாணவர்களுக்குப் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 18 படிப்புகளுக்கு மட்டுமே 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததால் புதுச்சேரி மாணவர்கள் உயர் கல்விப் பயில முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில்கூட புதுச்சேரிக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய பரிந்துரைப் புறந்தள்ளப்பட்டுஇ தமிழ்நாடு, டில்லி என வெளி மாநில வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலும்இ,மண்ணன் மைந்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி புதுச்சேரி தனி மாநிலத் தகுதி இல்லாமல் பாதிக்கப்படுவது குறித்து ஏராளமாக சொல்லிக் கொண்டே போக முடியும்.

கடந்த 2006 ஆகஸ்ட் 2-இல் நாடாளுமன;றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை "புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி தருவது சரியே" எனக் கூறியதுடன் அதற்கான காரணங்களையும் ஆதாரத்துடன் விளக்கி உள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்தகால ஆட்சிகளில் இதுவரையில் 11 முறைத் தனி மாநிலத் தகுதிக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தனி மாநிலத் தகுதி வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. தாங்களும் 2021 தேர்தல் அறிக்கையில் கூட ஆட்சியாளர்களுக்கு அதிகார வர்கத்தின் தடையற்ற ஒத்துழைப்பை  
உறுதி செய்ய தனி மாநில அந்தஸ்தே தீர்வு என முதன்மையாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால்இ மத்திய அரசு புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு இதுவரையில் செவிசாய்க்கவில்லை. 


எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்திடும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடவும் வலியுறுத்துகிறோம்.
 
மிக்க நன்றி,

சட்டமன்ற   உறுப்பினர் மற்றும்
சமூக நல அமைப்புகள்

 தேதி:16.12.2022     இடம்:புதுச்சேரி


புதுச்சேரிக்கு  தனிமாநில தகுதி பெற வலியுறுத்தி சட்டமன்ற  உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்கள் தலைமையில்  

1.திராவிடர் விடுதலை கழகம்,
2.தமிழ் மீனவர் விடுதலை வேங்கை,
3.மக்கள் உரிமை கூட்டமைப்பு,
4.திராவிடர் கழகம்,
5.தந்தை பெரியார் திராவிட கழகம்
6.மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்
7.அம்பேத்கர் தொடர்படை 8.மக்கள் வாழ்வுரிமை இயக்கம்
9.நகரத் தலித் பாதுகாப்பு இயக்கம்
10. மாணவர் கூட்டமைப்பு 11.தமிழக வாழ்வுரிமைக் கட்சி
12.இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்
13.தமிழ் தேசிய பேரியக்கம் 14.நாம் தமிழர் கட்சி 15.புதுச்சேரி தன்னுரிமை கழகம்
16.புதுவை சிவம் அறக்கட்டளை
17.புதுச்சேரி படைப்பாளர் இயக்கம்
18.பெற்றோர் ஆசிரியர் சங்கம்
19தமிழ் தேசிய முன்னணி
20.பெரியார் சிந்தனையாளர் இயக்கம்
21.இந்திய தேசிய இளைஞர் முன்னணி
22.ஆம் ஆத்மி
23.அகில இந்திய மஜ்லிக் கட்சி
24.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
25.எஸ் டி பி ஐ
26.ராஜீவ் காந்தி விழிப்புணர்வு இயக்கம்
27.பி போல்ட்
28.இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் 29.கலாம் விதைகளின் விருட்சம்
30.புதுச்சேரி மக்கள் உரிமைக் கட்சி
31.புதிய நீதி கட்சி
32.மக்கள் நற்பணி இயக்கம் 33.இந்திய புரட்சியாளர் இயக்கம்
34.மக்கள் அதிகாரம்
35.புதுவை மாநிலம் மாணவர் மற்றும் பெற்றோர் சங்கம்
36.செம்படுகை நன்னீரகம் 37.இராவணன் படிப்பகம் 38.பழங்குடி மக்கள் பாதுகாப்பு இயக்கம் 39.புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை
40.அரசு ஊழியர்கள் சம்மேளன கூட்டு இயக்கம் 41.புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு 42.ஒருங்கிணைந்த பணியாளர்கள் சேவை மற்றும் நலச்சங்கம்
43. மனித உரிமைகள் செயல்பாட்டு மையம் புதுச்சேரி
44. மக்கள் நல முன்னணி 45.தலித் இயக்கங்களின்  ஜனநாயக முன்னணி
46உலகத் தமிழ் கழகம் 47.இந்திய மக்கள் சக்தி கழகம்  
48.தமிழர் களம் உட்பட

 தீவிரமடைகிறது மாநிலத் தகுதி கோரிக்கை!

 தீவிரமடைகிறது மாநிலத் தகுதி கோரிக்கை!

புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி கேட்டு அனைத்துக் கட்சி, சமூக அமைப்புகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு அவர்கள் தலைமையில் முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களைச் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் 'மாநில அந்தஸ்து கோரிக்கையை பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் அவர்கள் செய்யவில்லை. மாநில மக்களின் நலத்திட்டங்கள் அதிகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியவில்லை. இதனால், அன்றாடம் மன உளைச்சலாக இருக்கிறது. மாநில அந்தஸ்து பெற பல வழிகளிலும் முயற்சி செய்வோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம்' என உறுதி அளித்தார்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

புதுச்சேரி மாநில தகுதி கோரிக்கைப் பிரகடனம்

 பழைய செய்தி..  24-01-2014 குறிப்புக்காக மட்டும்..)

மாநில அந்தஸ்து கோரிக்கைப் பிரகடனம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்தை மத்திய அரசு உடனடியாக வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே வழங்கிடுமாறு அகில இந்திய என்.ஆர். காங்கிரசின் மாநில மாநாடு ஒருமனதாக வலியுறுத்துகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய யூனியன் பிரதேசமாகும். பிரெஞ்சு கலாச்சாரத்தின்; ஒரு அங்கமாகவும் அறிவு செறிந்த இடமாகவும் புதுச்சேரி திகழ்கிறது. 1200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பின்னணியைக்கொண்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்; 138 ஆண்டுகள் இருந்து பின்னர் 1954ம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த ஆசிய ஜோதி மாண்புமிகு பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் அந்த உரிமை வேட்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் புதுச்சேரியை பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் பிம்பமாக  ஜன்னலாகக் கருதி மத்திய அரசின் செல்லக்குழந்தையாக வைத்திருக்க வேண்டுமென்ற உயரிய பண்பின் அடிப்படையில் புதுச்சேரியை மத்திய அரசின் நேரடிப் பார்வையில் வைத்திருக்க வேண்டுமென்று விரும்பினார். அதன் காரணமாக யூனியன் பிரதேச சட்டம் 1963ன் கீழ் புதுவை ஒரு யூனியன் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை பேணிட பண்டித ஜவகர்லால் நேரு அவர்களால் 30 சட்டமன்ற உறுப்;பினர்கள் மற்றும் 3 நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டசபையோடு கூடிய யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உருவாக்கப்பட்டது.
 
பின்தங்கிய நிலையில் இருந்த யூனியன் பிரதேசம் அதன் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் அதற்கான நிதி மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க விடுதலை இயக்க தலைவர்களும் மக்களும் சம்மதித்தனர். அந்த நேரத்தில் முழு மாநில அந்தஸ்து பெறுவதற்கான நியாயமும் கோரிக்கையும் எழவில்லை. ஆனால் காலப்போக்கில் புதுச்சேரியின்; சமூக அந்தஸ்து உயர்ந்தது பொருளாதார வளர்ச்சி மேலோங்கியது. ஆனால் அரசியல் அந்தஸ்து மட்டும் உயரவில்லை.
 
யூனியன் பிரதேசம் என்ற முறையில் புதுச்சேரி இந்திய குடியரசுத் தலைவரின் நேரடிப் பார்வையில் அவரது பிரதிநிதியான துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. யூனியன் பிரதேசத்தை நேரடியாக கண்காணிக்கும் பொறுப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம், அமைச்சரவை, முதலமைச்சர் ஆகியோர் இருந்தபோதும் அவர்கள் துணைநிலை ஆளுநருக்கு ஆலோசனை வழங்குபவர்களாக இருக்கிறார்களே தவிர முடிவுகள் எடுக்கும் அதிகாரம் படைத்தவராக இல்லை. 
 
 அரசின் அன்றாட நடவடிக்கைகளும் அதைச்சார்ந்த கோப்புகளும்ää கோப்புகளின் மீது முடிவெடுக்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கோää முதலமைச்சருக்கோ இல்லை. தமிழகத்திலோ அல்லது மற்ற மாநிலத்திலோ ஒரு துறையைச் சார்ந்த கோப்புகளின் மீது முடிவெடுக்கும் அதிகாhரம் அந்த அமைச்சருக்கு மட்டுமே உண்டு. தேவைப்பட்;டாலன்றி அந்த கோப்பு முதலமைச்சருக்குக்கூட அனுப்பப்படமாட்டாது. இது ஜனநாயகத்தின் முழு பண்பினை பறைசாற்றுகிறது. ஆனால், புதுச்சேரியின் அரசாங்கம் மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் ஒரு தனித்துறை போல செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அரசாங்க விதிகள், நிதி சம்பந்தப்பட்ட விதிகள், நியமன விதிகள் அனைத்துமே மத்திய அரசின்; விதிகளாக இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்; சொல்லப்பட்ட மாநில பட்டியலில் உள்ள பணிகளைப்பற்றிய சட்டங்களை உருவாக்குவதற்குக்கூட மக்களால் தேர்;ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள் புதுவை யூனியன் பிரதேசத்தில் விரிவாக்கப்பட்டுள்ளன. 
 
புதுச்சேரியின்; நிலைமைக்குத் தகுந்த ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதனைச் சட்ட மசோதாவாக உருவாக்கி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அங்கு ஒப்புதல் பெற்ற பிறகே சட்டமாக உருவாகிறது. இங்கு இருக்கக்கூடிய நீதி நிர்வாகம் கூட அண்டை மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்குக்கூட கிடையாது. அதனை மத்திய பணி ஆணையாளர் ஆணையம்தான் செய்யவேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
 
புதுச்சேரியின் ஆண்டு வரவு-செலவு அறிக்கைக்கூட மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடுதான் புதுச்சேரி சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிதிநிலையை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அதற்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசால் புதுச்சேரிக்கு கொடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய பிரதிநிதிகள் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில் அவற்றை நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதற்குக்கூட உரிமையில்லை. அதைக்கூட புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீர்மானிக்கின்றனர். நிர்வாகத்தின் தலைவர் துணைநிலை ஆளுநராக இருப்பதால் புதுச்சேரி அரசில் செயல்படக்கூடிய இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் அவருக்கு விசுவாசமாக நடந்துகொள்கிறார்களே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அல்ல.
 
ஒரு மாநிலத்தில், எந்த அதிகாரிக்கு எந்த துறையை ஒதுக்கி பணி செய்ய வேண்டும் என்ற முடிவினை எடுக்க வேண்டியது முதலமைச்சர்தான். ஆனால் இங்கே தகாத காரணங்களைக்கூறி அந்த அதிகாரத்தையும் டெல்லியில் உள்ள அதிகார வர்க்கம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாக முடியவில்லை. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபெறுகிறது.
 
ஆரம்பகால கட்டத்தில் தாராளமான நிதி ஆதாரத்தை அளித்து வந்த மத்திய அரசு, 1991ம் ஆண்டுக்குப்பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியின் காரணமாக படிப்படியாக புதுச்சேரிக்கு வழங்கிவந்த நிதியையும் குறைத்துக்கொண்டு வந்து, இன்றைக்கு புதுச்சேரியை ஒரு நிதிச்சிக்கலில் தள்ளிவிட்டிருக்கிறது. திட்டமிடாத வரவுசெலவு அறிக்கையில் உருவாகும் பற்றாக்குறை அனைத்தையும் மத்திய அரசு கொடுத்து வந்ததனால் ஒவ்;வொரு ஆண்டும் புதுச்சேரி அரசு ஒரு உபரி நிதிச்சூழ்நிலையை உருவாக்கியது. திட்ட செலவிற்கு மொத்த செலவில் 70% சதவீதத்தை மானியமாகவும் 30% சதவீதத்தை குறைந்த வட்டிகொண்ட கடனாகவும் அளித்து வந்தது. எனவே திட்டமிட்ட வளர்ச்சியை நம்மால் எய்த முடிந்தது. 
 
ஒரு காலகட்டத்தில் திட்டமில்லா வரவு-செலவின் மொத்த ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை மத்திய அரசு நன்கொடையாக வழங்கியது. ஆனால் சமீப காலத்தில் இதனைப் படிப்படியாகக் குறைத்து வந்து ஒவ்வொரு ஆண்டும் செலவின் வளர்ச்சியை 3% சதவீதமாகக் கணக்கிட்டு அதை மட்டுமே கொடையாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த 3 ஆண்டுகளில் திட்டமிடா இடைவெளி கொடையாக ரூபாய் 530 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. இது மொத்த செலவீட்டில் 18லிருந்து 20 சதவீதமாகும். மீதி உள்ள செலவினை, புதுச்சேரி அரசு தன்னுடைய சொந்த வருவாயிலிருந்து சமாளிக்க வேண்டியுள்ளது. 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் தனது 17000 பணியாளர்களுக்கு ரூபாய் 40 கோடியை சம்பளமாக வழங்க வேண்டிய நிலையிருந்தும் இதற்கான இழப்பீட்டையும் மத்திய அரசு வழங்கவில்லை. மின்சார அளிப்பில் ஏற்படும் இழப்பையும் மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. ஒத்துக்கொண்ட நிதியை ஏதாவது காரணத்தைக்காட்டி கொடுக்க மறுக்கிறது.
 
திட்ட செலவைப் பொறுத்த வரையில் 70% சதவீதமாக இருந்த மானியம் 30% சதவீதமாக குறைக்கப்பட்டது. 30% சதவீதமாக இருந்த கடன் அளவு 70% சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் புதுச்சேரி; அரசின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வந்ததோடு ஒவ்வொரு ஆண்டு திட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டினை செலவு செய்யமுடியாத நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது. 
 
அடுத்த கட்டமாக 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு கடன் கொடுக்கும் முறையை நிறுத்திவிட்டு வெளி அங்காடியில் கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அதற்காக 2006ம் ஆண்டு ஒரு பொதுக்கணக்கினை புதுச்சேரி அரசுக்கு உருவாக்கி கொடுத்து பல்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கும் நிலைய ஏற்படுத்தி விட்டது. அதனால் புதுச்சேரி இன்று ரூபாய் 4040 கோடி, அதாவது மாநில உற்பத்தியில் 30 சதவீதத்தை கடனாகப் பெற்றதனால், கடன்வாங்கும் வரம்பும் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவு கொடுத்த மத்திய அரசு கடைசியில் அதை 300 கோடியாக குறைத்துள்ளது. இப்படி மத்திய அரசு எதேச்சதிகாரமாக எடுத்த முடிவுகளினால் புதுச்சேரி அரசுக்கு வரலாறு காணாத ஒரு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கும் என்ற எண்ணம் பொய்த்துவிட்டது. யூனியன் பிரதேசமாக இருப்பதற்கான நிதிவசதி காரணமும் முற்றிலும் தோற்றுவிட்டது.
 
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ந்துள்ள புதுச்சேரி இன்றைக்கு அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம், பணியளார் அதிகாரம், நிதி அதிகாரம் ஏதுமின்றி தத்தளிக்கொண்டிருப்பது ஒரு மிகப்பெரிய முரண்பாடான விஷயம். ஒரு கூட்டாட்சி; தத்துவத்தின்கீழ் இயங்கும் இந்திய நாட்டில் மாநிலங்கள் பல்வேறுபட்ட அதிகாரங்களைப்பெற்று மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற இன்றைய சூழ்நிலையில் புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அனைத்து உரிமைகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாரைவார்த்துவிட்டு இருப்பது ஒரு மிகப்பெரிய ஜனநாயக முரண்பாடாகும். சட்டசபை இருக்கும் இடத்தில் யூனியன் பிரதேச அமைப்பும்;, யூனியன் பிரதேச அமைப்பு இருக்கும் இடத்தில், ஒரு சட்டமன்றமும் இருக்க முடியாது. சட்டமன்றம் இருக்கும் இடத்தில் ஒரு மாநில அரசு மட்டுமே இயங்க முடியும். இதுவே உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகப் பண்பாகும். 
 
 சட்டசபை இல்லாத அந்தமான்-நிக்கோபார் தீவுகள் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கலாம். ஆனால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் உள்ள இடத்தில், அமைந்துள்ள ஒரு அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படத் தேவையில்லை. அது ஒரு முழு சுதந்திரம் பெற்ற தமிழகம் அல்லது கேரளா போன்ற முழு மாநிலமாகத் திகழ வேண்டுமென்றுதான் புதுச்சேரி மக்கள் விரும்புகிறார்கள். நாம் அடிமைகளாக இருந்தபோது, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று கோஷமிட்ட தலைவர்கள் வ. சுப்பையா, எதுவார் குபேர், அன்சாரி துரைசாமி, முத்துக்குமரப்ப ரெட்டியார், ஐ.கே. குமரன், பக்கிரிசாமி பிள்ளை ஆகியோரின் சிந்தனைகள் புதுச்சேரி மக்கள் மனதில் தற்பொழுது கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி உள்ளது. மக்களின் இந்த அபிலாஷைகளைத் தீர்த்து வைத்து அவர்களுடைய வளர்ச்சிக்கு பாடுபடுவதற்காகவே அகில இந்திய என்.ஆர்; காங்கிரஸ் பேரியக்கம் புதுச்சேரிக்கு முழுமாநிலத் தகுதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்துகிறது.
 
முழு மாநிலத்தகுதி கிடைக்கும்போது புதுச்சேரிக்கு இதுவரை கிடைக்காத, மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும். முழு அதிகாரம் பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு எல்லா அதிகாரங்களும் கிடைக்கப்பெற்று இந்தியாவின் 28 மாநிலங்களில் நிலவக்கூடிய ஜனநாயக ஆட்சி, 29வது மாநிலமாக புதுச்சேரியில் முதன்முதலாக மலரத்தொடங்கும். எல்லா சட்டங்களும் இங்கே உருவாக்கப்படுவதாலும், எல்லா முடிவுகளும் புதுச்சேரியில் எடுப்பதாலும் டெல்லிக்கு சென்று முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதங்கள் குறையும். பண விரயம் தடுக்கப்படும். அதிகார வர்க்கம் மக்கள் பிரதிநிதிகளுக்கு விசுவாசமாக நடந்து, மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். புதுச்சேரி மாநில அரசிற்கு கிடைக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு அடித்தள ஜனநாயகம் மலருவதற்கும் வாய்ப்பு ஏற்படும். 
 
நுண்ணிய திட்டங்கள் கிராம அளவில் உருவாக்கப்பட்டு நான்கு பிராந்தியங்களுக்கும் சமச்சீரான ஒரு வளர்ச்சியை உருவாக்கமுடியும். திட்டங்களை உருவாக்குவதற்கு புதுச்சேரிக்கு என்று ஒரு திட்டக்குழு உருவாக்க முடியும். இக்குழுவின் மூலமாக புதுச்சேரியில் சமூகநீதியுடன் கூடிய வளர்ச்சியை விரைவுபடுத்தமுடியும். மக்களின் சமூகநலத்திற்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தங்குதடையின்றி முடிவுகள் எடுக்கப்படும். புதுச்சேரிக்கென்று தனி பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கான விதிகள் உருவாக்கப்பட்டு எல்லா பணியிடங்களுக்கும் தாமதமின்றி உள்ளுர் மக்களுக்கே கிடைக்கும் வாய்ப்பை உருவாக்க முடியும். தேவைப்படின், ஒரு உயர்நீதி மன்ற அமர்வையும் புதுச்சேரியில் உருவாக்க முடியும்.
 
புதுச்சேரி மாநிலத்திற்கென்று ஒரு விவசாயக் கொள்கை, சுற்றுப்புறச்சூழல் கொள்கை, தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்போடு கூடிய இயற்கை வளங்களைப் பாதிக்காத வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும். சிறப்பு பொருளாதார மண்டலம், தடையில்லா வணிகத்தளம், சுற்றுலாத்தளம், ஆகியவற்றை உருவாக்க நமக்கே உரிமை கிடைக்கும். புதுச்சேரியில் பெரிய பிரச்சினைகளான வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் குறையும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
 
இவை அனைத்தையும் விட சட்டரீதியாக நமக்கு கிடைக்கவேண்டிய நிதி உரிமைகள் புதுச்சேரிக்குக் கிடைக்கும். மத்திய அரசு ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் உருவாக்கும் நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிடைக்கும் ஒதுக்கீடு மற்ற மாநிலங்களைப்போல புதுச்சேரிக்கும் கிடைக்கும். தற்போது நிலுவையில் உள்ள 13வது நிதிக்குழு மாநிலங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. மத்திய அரசின் மொத்த வருவாயிலிருந்து 39.5% சதவீதத்தை இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அக்குழு வரையறுத்துள்ள காரணிகளின் அடிப்படையில் புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் நமக்கு 2013-14ம் ஆண்டு மட்டும் ரூ.640 கோடி வருவாயாக கிடைக்கும். இத்தொகையை திட்டவளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொண்டால் நாம் வெளி அங்காடிகளில் கடன் வாங்காமலேயே நமது திட்டத்திற்கான நிதியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.
 
திட்டமில்லா பட்ஜெட்டில் இதனால் பற்றாக்குறை ஏற்பட்டால் அப்பற்றாக்குறையை இந்திய அரசியலமைப்புச் சடடம் விதி 275ன் கீழ் நமக்குத் தேவையான நிதியை அளிக்க நிதிக்குழு பரிந்துரைக்கும். இதுதவிர 12 தலைப்பின்கீழ் நிதிக்குழு தனிப்பட்ட வளர்ச்சிக்காக நன்கொடை நிதியை அளிக்கிறது. உதாரணமாக ஆரம்பக் கல்வி வளர்ச்சி, பேரிடர் நிவாரணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி நிதி, ஆரம்ப சுகாதார வளர்ச்சியை பெருக்குவதற்கான நிதி, சுற்றுப்புறச்சூழல் நிதி என்று நிதியுதவி கிடைக்கும். மேலும், ஒவ்வொரு துறைக்கும் தேவையான செலவுக்கேற்ற நிதியை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின்கீழ் மாநிலம் என்ற முறையில் பெற்றுக்கொள்ள முடியும். நமது வரி முறைகளை நமது தேவைக்கேற்றவாறு
மாற்றிக்கொள்வதற்கான உரிமை கிடைக்கும். இதுபோக உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து நேரடி உதவி பெற்று அதற்கான திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் நமக்கு உரிமை கிடைக்கும். இவற்றிற்கு மேல் புதுச்சேரி அரசின் சொந்த வருவாய் கடந்த காலங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 1999-2000ஆண்டில் ரூ.693.82 கோடியாக இருந்த மொத்த வரி வருவாய் 2010-11ம் ஆண்டு ரூ.3200 கோடியாக உயர்ந்துள்ளது. இது புதுச்சேரியின் வருவாய் அமைப்பு வலுவாக உள்ளதைக் காட்டுகிறது. அதனால்தான் அரசின் 80 சதவீத செலவினைச் சொந்த வருவாயிலிருந்து சந்திக்கக்கூடிய தன்னிறைவு நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
எனவே, தேர்தல் அறி;க்கையில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும், நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த அனுகூலங்கள் எல்லாம் நாம் யூனியன் பிரதேசமாக இருப்பதால் இந்தாள் வரை மறுக்கப்பட்;டுள்ளது. எனவே, நமக்கு ஜனநாயக உரிமையை அளிக்கும் மாநிலத் தகுதி வரும்போது நாமே நம் காலில் நிற்கும் அளவிற்கு நிதி வசதி பெறலாம். எனவே மாநிலத் தகுதி பெற்றால் மத்தியில் இருந்து கிடைக்கும் தாராள நிதி உதவி கிடைக்காது என்று அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு இக்கட்டான சூழ்நிலையைத்தான் மத்திய அரசு உருவாக்கி உள்ளதே தவிர எதிர்காலத்தில் ஒரு வசதியான சூழ்நிலையை உருவாக்கும் என்ற எண்ணத்திற்கு இடமே இல்லை. யூனியன் பிரதேசமாக இருந்து கோவா மாநில தகுதி பெற்றபோது இப்படிப்பட்ட ஒரு ஐயம் ஏற்பட்டது. ஆனால் மாநிலத் தகுதி பெற்ற பிறகு அதன் அனுபவம் அந்த ஐயத்தை பொய்ப்பித்திருக்கிறது. 
 
அவர்களுக்கு நிதி நெருக்கடியோ, கஷ்டமோ ஏற்படாத வகையில் அவர்களுக்கு நிலைமை சாதகமாக உள்ளது, புதுவைக்கு மாநிலத் தகுதி கிடைக்கும்போது மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு அளித்துள்ள சலுகைபோல நாம் வைத்துள்ள ரூ.4040 கோடி கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். இல்லையென்றாலும் குறைந்தபட்சம் வட்டியாவது தள்ளுபடி செய்யப்பட்டு நாம் கொடுக்கவேண்டிய கடனின் காலக்கெடு நீட்டிக்கப்படும். குறைந்தபட்சம் நமது வட்டிச்சுமையாவது குறையும். தற்போதுள்ள ஆண்டுக்கு ரூ.500 கோடி என்ற வட்டிச்சுமை குறையும். நமக்கு பயனற்ற செலவைக் குறைத்துக் கொள்ளும்போது நிதி நெருக்கடிக்கான காரணங்கள் மறைந்துவிடும். எனவே, மாநில தகுதி; பெறுவது எல்லா வகையிலும் உகந்தது என்பதை மக்கள் மனமார ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அதற்கான தருணமும் வந்துவிட்டது என்பதை அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பேரியக்கம் உளப்பூர்வமாக உணர்கிறது.
 
இந்த விஷயத்தில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் அல்லது அமைப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதற்கான காரணமும் கிடையாது. ஏனனெறால் 1987ம் ஆண்டிலிருந்து 2012 ஆண்டு வரை புதுச்சேரியின் சட்டமன்றத்தில் 11 முறை புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி கோரி ஒருமனதான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், 9 முறை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, அஇஅதிமுக, இந்திய கம்யூனிஸ்; மார்க்சிஸ்ட், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ஜ.க மற்றுமுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு மாநிலத் தகுதி கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கான நியாயத்தை மத்திய அரசிடம் கூறியுள்ளன. புதுச்சேரி அரசு நியமித்த வல்லுனர் குழு, நிர்வாக, நிதி, பொருளாதார, சமூக சூழ்நிலைகளை எல்லாம் ஆராய்ந்து புதுச்சேரி மாநிலத் தகுதியை பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளது.
 
1993ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்திருந்த முன்னாள் பாரதப் பிரதமர் மாண்புமிகு பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள் மாநிலத் தகுதி கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று வாக்குறுதி அளித்தார். அப்போதிருந்த ராஜாங்க உள்துறை அமைச்சர் பி.எம். சையீது அவர்களும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர் திரு.தேவகவுடா அவர்கள் தலைமையில் அமையப்பெற்ற அரசாங்கமும் இக்கோரிக்கையை பரிசீலனை செய்தது. அதற்குப்பிறகு அமைந்த பாஜக அரசும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எல்.கே.அத்வானி அவர்களும், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.மதன்லால் குரானா அவர்களும் புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
 
இந்த பின்புலத்தில், இந்திய அரசின் உள்துறை நிலைக்குழு தற்போது மக்களவையில் எதிர்கட்சித் தலைவராக உள்ள திருமதி. சுஷ்மா சுவராஜ்; அவர்கள் தலைமையில் 2005ம் ஆண்டு ஜீன் 18ல் புதுவைக்கு வந்து அப்போது முதலமைச்சராக இருந்த திரு.ந.ரங்கசாமி அவர்களிடமும் மற்ற அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மாநிலத் தகுதி பற்றி விரிவான விவாதம் நடத்தினார். இந்த விவாதத்தின் அடிப்படையில் இக்குழு புதுச்சேரிக்கு சிறப்பு மாநில தகுதியை அளிக்கவேண்டும் என்று கூறியது. இக்குழுவின் அறிக்கையில் கூறியுள்ள முக்கிய கருத்து என்னவென்றால் யூனியன் பிரதேசம் என்ற அமைப்பு முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு முற்றிலும் தடையாக இருப்பதாலும், மக்களின் விருப்பங்கள் மதிக்கப்படவேண்டும் என்று கூறியதுதான். இதை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு புதுச்சேரிக்கு சிறப்பு தகுதியோடு கூடிய மாநில அந்தஸ்தினை வழங்கவேண்டும் என்று ஒருமனதாக சிபாரிசு செய்தது. இது உள்துறை அமைச்சக நிலைக்குழுவில் 121 அறிக்கையில் இடம்பெற்று நாடாளுமன்ற மக்களவைக்கு 2006ம்ஆண்டு ஆகஸ்டு 2ம்தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இதுதவிர இந்திய அரசால் நியமிக்கப்பட்ட 11வது நிதிக்குழு இக்கோரிக்கைக்கு வலு சேர்க்கும்வகையில் சிபாரிசு செய்துள்ளது.
 
எனவே, புதுச்சேரியை ஆளுகின்ற உள்துறை அமைச்சகத்தின் நிலைக்குழுவே புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கவேண்டும் என்று முடிவெடுத்து பாராளுமன்றத்திற்கு தெரிவித்தபிறகு இதனை கால தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும் என்று அகில இந்திய என்ஆர்.காங்கிரஸ் பேரியக்கம் தீர்மானிக்கிறது. புதுவை மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒத்த கருத்தோடு இந்த கோரிக்கையை வென்றெடுத்து மாநிலத் தகுதியோடு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்றும், இந்தியாவில் புதுச்சேரி முதன்மை மாநிலமாகத் திகழ்வதற்கு மாநிலத் தகுதி; உறுதுணையாக இருக்கும் என்றும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பேரியக்கம் கருதுவதால் எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
 
(V. பாலன்)
பொதுச் செயலாளர் என்.ஆர். காங்கிரசு